உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ரத்து

Published On 2023-02-22 09:34 GMT   |   Update On 2023-02-22 09:34 GMT
  • கடந்த 2 மாதமாக நடக்காததால் ஏமாற்றம்
  • ஏராளமானோர் தாலுகா அலுவலகம் வந்து திரும்பி சென்றனர்

நெமிலி:

நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங் களில் விவசாயமே பிரதானமாக இருந்து வருகிறது.

நெமிலி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடத்த வேண்டும். 17 துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் கடந்த 2 மாதங்க ளாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறவில்லை.

நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீ ரென கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஏராளமான விவசாயிகள் தாலுகா அலுவலகம் வந்து திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News