உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2023-06-11 08:30 GMT   |   Update On 2023-06-11 08:30 GMT
  • மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவி கண்டித்துள்ளார்
  • குடும்ப தகராறில் விபரீதம்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது35). இவர் விவசாயம் செய்து வந்தார்.

இவரது மனைவி காயத்ரி. நேற்று காலையில் அன்பரசன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் காயத்ரி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் மனவேதனை அடைந்த அன்பரசன் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து அவளூர் சப் இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News