உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

போலி டாக்டர் கைது

Published On 2023-08-31 09:28 GMT   |   Update On 2023-08-31 09:28 GMT
  • ஓமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தார்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ராணிப்பேட்டை

சோளிங்கர் அடுத்த பரவத் தூரில் ஒருவர் ஓமியோபதி படித்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தது.

அதைத்தொ டர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் சோளிங்கர் அரசு மருத் துவமனை தலைமை மருத்துவர் பாஸ்கர், டாக்டர் கருணாகரன், மருந்தாளுனர் சேகர் ஆகியோர் பெரியவைலம்பாடி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் பெரிய தெருவை சேர்ந்த விஜய் (வயது 29) என்பவர் ஓமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அங்கி ருந்த ஊசிகள் மற்றும் ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்த னர். விஜயை சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

இது குறித்து சோளிங் கர் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News