உள்ளூர் செய்திகள்

டிரைவர் அலுவலக உதவியாளர் பணிக்கு போலி அழைப்பானை

Published On 2022-08-02 14:47 IST   |   Update On 2022-08-02 14:47:00 IST
  • போலீசில் புகார்
  • கலெக்டர் எச்சரிக்கை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஜீப் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவித்து போலியான அழைப்பானை அடையாளம் தெரியாத நபர்களால் அனுப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஜீப் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகத்தினால் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை அவ்வாறு அறிவிப்பு இருந்தால் செய்தித்தாள்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

போலியான அழைப்பினை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News