உள்ளூர் செய்திகள்

முன்னாள் படைவீரர் குறை தீர்க்கும் கூட்டம்

Published On 2023-04-24 06:46 GMT   |   Update On 2023-04-24 06:46 GMT
  • வருகிற 26-ந் தேதி நடக்கிறது
  • கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான இரண்டாம் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி அன்று மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அவரது குடும்பத்தைச் சார்ந்தோர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்.

இந்த குறைதீர்க்கும் முகாமில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News