உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு

Published On 2022-06-24 10:35 GMT   |   Update On 2022-06-24 10:35 GMT
  • ஆற்காடு வேளாண்மை மையத்தில் வைக்கப்பட்டிருந்தது
  • வரிசை எண்கள் கணினியில் பதிவேற்றம்

ஆற்காடு :

ஆற்காடு வேளாண்மை விற்பனை மையத்தில் பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தின் வரிசை எண்களை திறந்து சரி பார்த்து கணினியில் பதிவேற்றம் செய்து கர்நாடக மாநிலம் பெங்களூருபெல் நிறுவனத்திற்கு அனுப்பிவைக்க முன்னேற்பாடு பணிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர் .

Tags:    

Similar News