உள்ளூர் செய்திகள்

செல்போன் தர மறுத்தவருக்கு வெட்டு

Published On 2022-12-04 09:24 GMT   |   Update On 2022-12-04 09:24 GMT
  • வாலிபர் கைது
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் அம்மனூர் பகுதி சேர்ந்தவர் அருள் (வயது 32). இவர் நேற்று பழனி பேட்டை பகுதியில் நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அரக்கோணம் மதுரப்பிள்ளை தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான்(34) என்பவர் அருளிடம் வந்து தன்னுடைய செல்போன் வேலை செய்யவில்லை என்றும் அதனால் உன்னுடைய செல்போனை தருமாறு அருளிடம் கேட்டார்.

அதற்கு அவர் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் ரகுமான் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருளை கையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அருளுக்கு காயம் ஏற்பட்டது.

பின்னர் இதுகுறித்து அருள் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் ரகுமானை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த பட்டா கத்தி மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News