உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டையில் கிரிக்கெட் போட்டி

Published On 2023-09-08 09:36 GMT   |   Update On 2023-09-08 09:36 GMT
  • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
  • வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்

கலவை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற அணிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பரிசு வழங்கினார்.

இதில் தி.மு.க மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு எம்.எல்.ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட பொருளாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News