உள்ளூர் செய்திகள்

மின்வயரில் சிக்கி பசுமாடு சாவு

Published On 2022-10-10 15:21 IST   |   Update On 2022-10-10 15:21:00 IST
  • மழை பெய்த போது பரிதாபம்
  • 2 மணி நேரம் மின் தடை

அரக்கோணம்:

அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது.

அப்போது மகேந்திரன் என்பவரது பசு மாடு அந்த பகுதியில் அறுந்து கிடந்த டிரான்ஸ்பார்மர் மின் வயரில் சிக்கி பரிதாபமாக இறந்தது.

இதனால் அரக்கோணம் நாகாலம்மன் நகர், ராகவேந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் மின் தடை ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மின் ஊழியர்கள் சுமார் 2 நேரத்திற்கு பின் மின் தடையை சரி செய்தனர்.

Tags:    

Similar News