உள்ளூர் செய்திகள்

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்த போது எடுத்த படம். அருகில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

ஆற்காடு சட்டசபை தொகுதியில் 10 பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம்

Published On 2022-11-05 09:44 GMT   |   Update On 2022-11-05 09:44 GMT
  • உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நடந்தது
  • கலெக்டர் எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆற்காடு சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சனைகளைக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆற்காடு சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சனைகளைக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ வழங்கியுள்ள 10 மனுக்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்து, துறைகள் தங்களின் தலைமை இடத்திற்கு அறிக்கையை முறையாக தயார் செய்து வழங்கிட வேண்டும் எனவும், அனைத்து திட்டங்களும் அரசின் மூலம் ஒப்புதல் பெரும்படியாக முழுமையாக ஆராய்ந்து என்ன பிரச்சனைகள் அதனை நிவர்த்தி செய்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் துறைச்சார்ந்த அலுவலர்களை கேட்டுக் கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News