உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

Published On 2023-05-13 07:58 GMT   |   Update On 2023-05-13 07:58 GMT
  • போலீசார் விசாரணை
  • வேலை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த தேவலாபு ரம் பகுதியை சேர்ந்தவர் கனக ராஜ் (வயது 22), கட்டிட தொழிலாளி. இவருக்கு திரு மணமாகி 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர் நேற்று சான்றோர் குப்பம் பகுதியில் ஒருவீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்த உயரழுத்த மின்ஒயரில் தவறுத லாக கைப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம் பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக் காக ஆம்பூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News