உள்ளூர் செய்திகள்
ரேஷன் கடைகளில் பொருட்கள் எடை குறைவாக வழங்குவதாக புகார்
- கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை , சிப்காட் மற்றும் சுற்றுவட் டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் எடை குறைவாக பொருட்கள் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது . இதுகுறித்து நடவ டிக்கை எடுக்கபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
எனவே இது குறித்து நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், எடை குறைவாக குறைவை கண்காணிக்கும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
கலெக்டர் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்று கண்காணித்து எடை குறைவாக வழங்கும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உபயோகிக்கும் ரேஷன் கடை பொருட்களை எடை சரியாகவும், தரமானதாகவும் வழங்க வேண்டும் என்பதே நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.