உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தில் கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

போலீஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2023-08-09 15:55 IST   |   Update On 2023-08-09 15:55:00 IST
  • புகார்கள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார்
  • கைததிகள் அறை, ஆயுதங்கள் வைப்பறை அதிகாரிகளிடம் விரவங்களை கேட்டறிந்தார்

ராணிப்பேட்டை:

வாலாஜா போலீஸ் நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்த பதிவேடுகள், இணைய வழியாக பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள் குறித்த பதிவேடுகளையும் கைதிகள் அறை, காவலர்கள் ஓய்வெடுக்கும் அறை, ஆயுதங்கள் வைப்பறை, வரவேற்பாளர் அறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு போலீஸ் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாராஜா, சீனிவாசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

Similar News