உள்ளூர் செய்திகள்

மாணவி ஒருவருடன் முனிரத்தினம் எம்.எல்.ஏ. செஸ் விளையாடிய காட்சி.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டி

Published On 2022-07-21 14:32 IST   |   Update On 2022-07-21 14:32:00 IST
  • முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்

சோளிங்கர்:

சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு செஸ் போட்டி நடந்தது சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

அந்த போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட சார்பில் மாணவ மாணவிகளை தேர்வு செய்யும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மாவட்ட அளவிலான மாணவ மாணவிகளுக்கு செஸ் போட்டி மாவட்ட ஆட்சித் தலைமையில் போட்டியை துவக்கி வைத்தார்.

மாவட்டம் முழுவதும் 1462 மன மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் போட்டி கலந்து கொள்ள உள்ளனர். இதேபோல சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் மாவட்ட செஸ் போட்டி நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் மேரிஷெரின் தலைமை தாங்கினார். சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைதத்தார்.

செஸ் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் இருந்து 196 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அப்போது காங்கிரஸ் நகர தலைவர் கோபால் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News