உள்ளூர் செய்திகள்

கடைகளில் திடீர் சோதனை

Published On 2022-07-25 14:31 IST   |   Update On 2022-07-25 14:31:00 IST
  • போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு
  • போலீசார் கடும் எச்சரிக்கை

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் அவளுர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஓச்சேரி, மேலபுலம், பெரும்புலிப் பாக்கம், மாமண்டூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பங்க் கடைகளில் நேற்று சப் இன்ஸ்பெக்டர், சுரேஷ் குமார், சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் தலைமையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப் படுகின்றதா என்று சோதனை செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்க படும் என்று எச்சரிக்கை செய்தனர்.

Tags:    

Similar News