உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் கிருஷ்ணாபுரத்தில் மயான பாதை அமைப்பு

Published On 2022-10-11 14:03 IST   |   Update On 2022-10-11 14:03:00 IST
  • 10 ஆண்டுகளாக சரியான‌ பாதை இல்லாததால் மக்கள் அவதி
  • அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்

சோளிங்கர்:

சோளிங்கர் அடுத்த புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இறந்தவர்‌ சடலத்தை மயானத்திற்கு எடுத்து செல்ல கடந்த 10 ஆண்டுகளாக சரியான‌ பாதை இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

மயான பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நாகராஜ் மற்றும் சோளிங்கர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூரணச் சந்தர்அவர்களிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை ஏற்று மயான பாதை அமைத்து தருவதாக உறுதி அளித்தார்கள் இதனை தொடர்ந்து சோளிங்கர் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ண சந்தர் அவர்கள் மயான பாதை அமைக்க அப்பகுதியில் ஆய்வு செய்தார். உடனடியாக மயான‌தை அமைப்பதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்‌.

கோரிக்கையை நிறைவேற்றிய தந்த மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நாகராஜ், மற்றும் ஒன்றிய செயலாளர் பூரணச் சந்தருக்கு கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

அப்போது சோளிங்கர் திமுக வழக்கறிஞர் உதயகுமார் ஊராட்சி மன்ற தலைவர் திருமால், ஒன்றிய கழக நிர்வாகிகள் எத்திராஜ், பூபாலன், படைத்தல் திமுக முன்னாள் கிளைச் செயலாளர் தர்மன் கிராம கிளைக் கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News