உள்ளூர் செய்திகள்

ரூ.31.50 லட்சத்தில் சிமெண்டு சாலை

Published On 2023-09-25 15:06 IST   |   Update On 2023-09-25 15:06:00 IST
  • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
  • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டது

கலவை:

மேல்விஷாரம் நகராட்சியில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில் அஞ்சுமன் தெரு மற்றும் பெரிய மசுதி தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.

இதற்கான கல்வெட்டினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.

இதில் கலெக்டர் வளர்மதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, நகரமன்றத் தலைவர் முஹமது ஹமீன், துணைத் தலைவர் குல்ஜார் அஹமது, நகராட்சி ஆணையாளர் (பொ) சந்தானம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News