உள்ளூர் செய்திகள்

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட காட்சி.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம்

Published On 2022-11-19 13:14 IST   |   Update On 2022-11-19 13:14:00 IST
  • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு
  • சமையல் ஒப்பந்ததாரருக்கு பாராட்டு

ஆற்காடு:

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 பள்ளிகளில் 661 மாணவ- மாணவிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப் பட்ட காலை உணவு திட்டம் கடந்த சில மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது.

ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1-ல் உள்ள முதல்- அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் குழந்தை களுக்காக சமைக்கப்பட்ட உணவின் சுவை மற்றும் தரத்தினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

உணவு தரமாகவும் சுவையாகவும் உள்ளது என சமையல் ஒப்பந்ததாரர் ஜெமினி ராமச்சந்திரனை பாராட்டினார்.

பின்னர் ஆற்காடு தோப்புக்கானா வடக்கு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாச சேகர், நகராட்சி பொறியாளர் கணேசன், நகர மன்ற உறுப்பினர் குணா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பென்ஸ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News