உள்ளூர் செய்திகள்

மாற்று திறனாளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை அமைச்சர் காந்தி வழங்கிய போது எடுத்த படம். அருகில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. உள்ளனர்.

மாற்று திறனாளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி

Published On 2022-12-23 09:52 GMT   |   Update On 2022-12-23 09:52 GMT
  • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
  • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் காந்தி பரிசு, சான்றிதழ் வழங்கினார்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுதிறனாளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ், பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கினார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ், 63 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 38 ஆயிரத்து 960 மதிப்பிலான உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.

Tags:    

Similar News