உள்ளூர் செய்திகள்

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர் கைது

Published On 2023-03-08 15:09 IST   |   Update On 2023-03-08 15:09:00 IST
  • கொலை வழக்கில் நடவடிக்கை
  • ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம் அருகே அவளூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டஜாகீர்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 42). இவர் கடந்த 2019-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு ராணிப் பேட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பாபு இருந்துள்ளார். இதையடுத்து பாபுவை கைது செய்ய நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார்.

இதனையடுத்து அவளூர்போலீசார் நேற்று பாபுவை கைது செய்து, ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News