உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து நகை திருடிய ராணுவ வீரர் கைது

Published On 2023-06-14 08:55 GMT   |   Update On 2023-06-14 08:55 GMT
  • சத்தம் கேட்டு குடும்பத்தினர் கண்விழித்துப் பார்த்தனர்
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

வேலூர் மாவட்டம் சோழவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் வயது(40).

இவர் இந்திய ராணுவத்தில் லடாக் பகுதியில் சிக்னல் ெரஜ்மெண்டில் பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் 20-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று அதிகாலை 4 மணி அளவில் குடிபோதையில் ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள சின்ன மேட்டு குடிசை கிராமத்துக்கு பைக்கில் சென்றார்.

அப்போது மேட்டு குடிசை பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இதை பயன்படுத்தி பன்னீர்செல்வம் மேட்டு குடிசை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவரது வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி 20 கிராம் வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டிருந்தார்.

அப்போது சத்தம் கேட்டு வெளியே தூங்கிக் கொண்டிருந்த கார்த்திகேயன் குடும்பத்தினர் கண்விழித்துப் பார்த்தனர்.

வீடு புகுந்து நகை திருடிய பன்னீர்செல்வத்தை பிடித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குபதிவு செய்து ராணுவ வீரர் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News