உள்ளூர் செய்திகள்

அடிக்கல் நாட்டு விழா நடந்த போது எடுத்த படம்.

ஆற்காட்டில் மக்கள் நல மருத்துவ மையம்

Published On 2022-06-09 15:26 IST   |   Update On 2022-06-09 15:26:00 IST
  • அடிக்கல்நாட்டு விழா நடந்தது.
  • ரூ.25 லட்சத்தில் கட்டும் பணி தொடக்கம்

ஆற்காடு:

ஆற்காடு நகராட்சி 1-வது வார்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் நல மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது.

இதற்கான அடிக்கல்நாட்டு விழாவிற்கு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் பவளக்கொடி சரவணன், முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர் பொன்.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இதில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே.சுந்தர ச் மூர்த்தி, நகர செயலாளர் ஏ.வி.சரவணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் 1-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முன்னா நன்றி கூறினார்.

Tags:    

Similar News