உள்ளூர் செய்திகள்

அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் போலி சான்றிதழ் மூலம் சேர்ந்த பெண்

Published On 2023-10-03 13:34 IST   |   Update On 2023-10-03 13:34:00 IST
  • போலீசார் விசாரணை
  • வடமாநிலத்தை சேர்ந்தவர்

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நக ரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர் வானவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சிக் குப்பின் அவர்கள் விமான நிலையம், துறைமுகம், அணு உலைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் பாது காப்பு பணியில் ஈடுபடுவார்.

இந்தநிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தினேஷ் சிங் என்பவ ரது மகள் சோனம் சிங் (வயது 23) என்பவர் பயிற்சி பெற்று வருகிறார்.

அவரது சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாநிலத் திற்கு அனுப்பி சரிபார்த்தபோது சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்தது.

இது குறித்து மத்திய தொழிற் பாது காப்பு படை இன்ஸ்பெக்டர் சிவபத்மா தக்கோலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News