உள்ளூர் செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி சான்றிதழை போலீசாருக்கு வழங்கிய போது எடுத்த படம்.

போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

Published On 2023-08-05 13:43 IST   |   Update On 2023-08-05 13:43:00 IST
  • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
  • குற்ற ஆய்வு கூட்டம் நடந்தது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாலமன் ராஜா,காண்டீபன், பாரதி, சப் இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், சீனிவாசன், தினேஷ் ரகு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன்,சுப்பிரமணி, மதிவாணன்,சதாசிவம், ஜான்சி, போலீஸ் ஏட்டுகள் மாறன், அப்துல் முஜீர், மீனா, ஜானகி தேவி போலீசார் கோபிகிருஷ்ணா, வெங்கடேசன், தாமோதரன், அமித் பாஷா திவாகர் ஆகியோரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேசுவரய்யா, அரக்கோணம் உதவி சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, ரவிச்சந்திரன், ராஜா சுந்தர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News