உள்ளூர் செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2023-06-27 08:48 GMT   |   Update On 2023-06-27 08:48 GMT
  • கலெக்டர் தொடங்கி வைத்தார்
  • போலீசார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் உலக போதை பொருள் தடுப்பு தின நிகழ்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் போதை பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில் கலால் துணை ஆணையர் சத்தியப்பிரசாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News