உள்ளூர் செய்திகள்
- மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
- இனிப்புகள் வழங்கப்பட்டது
காவேரிப்பாக்கம்:
நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நெமிலி பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு தலைவருமான வடிவேலு தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பவானி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி, நிர்வாகிகள் புருஷோத்தமன் ஹரிகிருஷ்ணன் சங்கர், முகமது அப்துல் ரகுமான், வக்கீல் கார்த்திகேயன், வடகண்டிகை பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.