உள்ளூர் செய்திகள்

அண்ணா பிறந்தநாளை அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாட வேண்டும்

Published On 2022-09-13 09:45 GMT   |   Update On 2022-09-13 09:45 GMT
  • பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்க வேண்டுகோள்
  • அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ. அறிக்கை

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் அரக்கோணம் எம்.எல்.ஏ.வுமான சு.ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரும் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

அன்றைய தினம் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர் கிளை கழக செயலாளர் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அண்ணாவின் பிறந்த நாளில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கிக் கொண்டாட வேண்டும்.

பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென அ.தி.மு.க.வினற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக இளைஞர்களை திசை திருப்பி வரும் தி.மு.க.வுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என சு.ரவி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News