உள்ளூர் செய்திகள்

கொக்கு மருந்து சாப்பிட்ட இளம்பெண் சாவு

Published On 2023-04-04 14:19 IST   |   Update On 2023-04-04 14:19:00 IST
  • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

ஆற்காட்டு அடுத்த லாடவரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகிரி. இவரது மகள் பூஜா (வயது 20). இவர், நேற்று முன்தினம் இரவு கொக்கு மருந்து சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News