உள்ளூர் செய்திகள்

பைக்கில் சென்ற வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்து சாவு

Published On 2023-08-08 09:33 GMT   |   Update On 2023-08-08 09:33 GMT
  • எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்
  • போலீசார் விசாரணை

கலவை:

வேலூர் முள்ளிப்பாளையம் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளமதி மகன் கோகுல்நாத் (வயது 17).

வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சுதாகர் (18). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஆற்காடு அருகே கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் நேற்று எலக்ட்ரீசியன் வேலை செய்துள்ளனர்.

பின்னர் வேலை முடிந்து மாலை 3 மணியளவில் ஆற்காட்டில் இருந்து கண்ணமங்கலம் சாலை வழியாக வேலூர் நோக்கிச் சென்றனர். பைக்கை கோகுல்நாத் ஓட்டியுள்ளார். ஆற்காடு- கண்ணமங்கலம் சாலையில் திமிரி அடுத்த கரடிமலை வளைவில் சென்றபோது பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே பலியானார். சுதாகர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், முதன்மை காவலர் சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த சுதாகரை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோகுல்நாத்தின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News