உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

Published On 2023-05-30 13:42 IST   |   Update On 2023-05-30 13:42:00 IST
  • அங்கன்வாடி மையத்தில் சமையலராக வேலை பார்த்து வந்தார்
  • போலீசார் விசாரணை

காவேரிப்பாக்கம்:

பாணாவரத்தை அடுத்த மகேந்திரவாடி கிராமம், பெரிய தெருவை சேர்ந்தவர் மனைவி பாரதி (வயது 32). இவர் அதே ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் துணி துவைத்துக் கொண்டி ருந்தார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News