உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு

Published On 2023-09-21 15:51 IST   |   Update On 2023-09-21 15:51:00 IST
  • பொதுமக்கள் அச்சம்
  • செடி, கொடிகளை அகற்ற வலியுறுத்தல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை பாரதி நகரில் 4 மாடி கட்டிடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த ஆண்டு முதல் பல்வேறு துறை அலுவலகங்க ளுடன்செ யல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள், பிரமுகர்கள் என பலர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று கீழ் தளம் எப்.ப்ளாக்கில் செயல்பட்டு வரும் மருத்துவ காப்பீடு அலுவலகம் எதிரே நேற்று மாலை பாம்பு ஒன்று திடீரென புகுந்தது.

இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர் அங்கு பணியாற்றிய ஊழியர்களே அந்த பாம்பினை விரட்டினர்.

கலெக்டர் அலுவலக பின்புறம் அதிகளவில் செடி,கொடிகள் நிறைந்து காணப்படுவதால் அங்கிருந்து பாம்பு வந்திருக்கலாம் . எனவே அங்குள்ள செடி, கொடி களையும், தேவையற்ற பொருட்களையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News