உள்ளூர் செய்திகள்

ரெயிலில் பயணம் செய்த வட மாநில வாலிபர் திடீர் சாவு

Published On 2022-06-20 14:31 IST   |   Update On 2022-06-20 14:31:00 IST
  • சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்.
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்தவர் அபிஸ் அன்சாரி. இவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடித்து நேற்று இரவு காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல ரெயிலில் புறப்பட்டார்.

அப்போது அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே வந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருந்தனர். இந்த நிலையில்தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அபிஸ் அன்சாரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை அரக்கோணம் ரெயில்வே போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரக்கோணம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News