உள்ளூர் செய்திகள்

5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-12-15 15:28 IST   |   Update On 2022-12-15 15:28:00 IST
  • போலீசார் சிறையில் அடைத்தனர்
  • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்

அரக்கோணம்:

அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகு திகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அரக்கோணம் பகுதிகளை சேர்ந்த அம்மனூர் சிவக்குமார் மகன் பன்னீர் செல்வம் (வயது 22), கிரிபில்ஸ் பேட்டை பகுதியை சேர்ந்த முனிசாமி மகன் திலிப் என்கிற டி.எம்.ஆர்.திலிப் (26), பிரபாக ரன் மகன் கவுதம் (21), ஏழுமலை மகன் அஜித் என்கிற போர் போஜி (25), அரக்கோணம் சோளிங்கர் ரோடு புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த பாலாஜி மகன் சசிக்குமார் என்கிற கவுதம் (26) ஆகியோரை அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

மேலும் இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய் தார்.

அதன்பேரில் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News