டிரைவரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது
- தூங்கிக்கொண்டிருந்த போது துணிகரம்
- பைக் மற்றும் செல்போன் பறிமுதல்
காவேரிப்பாக்கம்:
தூத்துக்குடி மாவட்டம் முந்தைய புரத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் (வயது 31). டிரைவர்.
இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து மினி வேன் மூலம் லோடு களை ஏற்றி க்கொண்டு வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ராணிப்பேட்டை மாவ ட்டம், காவேரிப்பாக்கம் அருகே வந்து கொண்டி ருந்தார். அப்போது சாப்பிடுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஓட்டல் அருகே வேனை நிறுத்தினார்.
ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வேனில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் முத்து வேல் செல்போனை திடீரென பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துவேல் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை திருடி சென்ற திருமலை ச்சேரி பகுதியைச் சேர்ந்த தீபக், வாலாஜாவை சேர்ந்த கோகுல் (22), மோனீஸ்வரன் (21), பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேசன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து பைக் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.