உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 350 மனுக்கள் பெறப்பட்டன

Published On 2022-12-20 09:53 GMT   |   Update On 2022-12-20 09:53 GMT
  • நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.

கலெக் டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக் கள், மாற்றுத்திறனாளிகளி டம் இருந்து நேரடியாக மனுக் களை பெற்றார்.

கூட்டத்தில் நிலப்பட்டா, பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி, மின் சாரத் துறை சார்பான குறை கள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் அளித்த னர். மொத்தம் 350 மனுக்கள் பெறப்பட்டது.

அந்த மனுக்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவ டிக்கை எடுக்கவும், மனு நிரா கரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்க ளுக்கு உடனடியாக தெரிவித் திட உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மைத் துறை நல அலுவ லர் முரளி, துணை கலெக்டர் தாரகேஸ்வரி, கலால் உதவி ஆணையர் சத்திய பிரசாத். மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News