உள்ளூர் செய்திகள்

நெமிலியில் 3 மேல்நீர் தேக்க குடிநீர் ெதாட்டிகள்

Published On 2022-10-06 09:39 GMT   |   Update On 2022-10-06 09:39 GMT
  • ஒன்றிய குழு தலைவர் திறந்து வைத்தார்
  • ரூ.57 லட்சத்தில் கட்டப்பட்டது

நெமிலி:

நெமிலி அடுத்த சயனபுரம், புதுகண்டிகை, சயனபுரம் காலனி ஆகிய 3 இடங்களில் ஊராட்சி நிதி மற்றும் ஒன்றிய நிதி மூலம் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் 3 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டது.

இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவெடுக்கப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடிவேலு தலைமை தாங்கினார்.

நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சுகன்யா ரவி, ஊராட்சி எழுத்தர் யுவராஜ், முஹம்மது அப்துல் ரஹ்மான், ரமேஷ், பெருமாள், ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News