உள்ளூர் செய்திகள்

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

Published On 2023-05-21 14:02 IST   |   Update On 2023-05-21 14:02:00 IST
  • பைக் பறிமுதல்
  • போலீசார் வாகன சோதனையில் சிக்கினர்

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்-திருவள்ளூர் சாலையில் உள்ள சில்வர்பேட்டை சோதனை சாவடியில் அரக்கோணம் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையை சேர்ந்த டேவிட் ஜிந்தா (வயது 48), அரக்கோணம் சுவால்பேட் டையை சேர்ந்த சோபன் (23) என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் ஓட்டி வந்த ஸ்கூட்டரில் சோதனை செய்ததில் 4 கிலோ கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கஞ்சாவையும், ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News