உள்ளூர் செய்திகள்

108 தேங்காய் உடைத்து அ.தி.மு.க வினர் கொண்டாட்டம்

Published On 2023-08-26 15:00 IST   |   Update On 2023-08-26 15:00:00 IST
  • இனிப்புகள் வழங்கினர்
  • 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம்:

அரக்கோணம் பழனி பேட்டை அங்காளம்மன் கோவில் அருகே ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி தலைமையில் அ.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை பட்டாசு வெடித்தும், 108 தேங்காய் உடைத்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதில் அரக்கோணம் அ.தி.மு.க நகர செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், பழனி, விஜயன், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News