உள்ளூர் செய்திகள்

2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

Published On 2023-01-27 15:28 IST   |   Update On 2023-01-27 15:28:00 IST
  • வெளியூர் சென்றிருந்த போது துணிகரம்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த அன்வர்த்திகான் பேட்டை சின்னத் தெருவை சேர்ந்தவர் சிவக்குமாரி (வயது 61). பூட்டு வியாபாரி . இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிக் கொண்டு சென்னையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

2 வீடுகளில் கொள்ளை

இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து சிவகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதனால்

அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குவந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை திருட்டு போயிருந்தது. இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் இணைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மற் றொரு இடத்தில் ரூ.23,000 பையில் மறைத்து வைத்திருந்ததை மர்ம கும்பல் விட்டு சென்றது தெரிய வந்தது.

அதே ஊரில் பெரிய தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி (65). இவர் கடந்த வாரம் தனது வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இவரது வீட்டின் பின்பக்க கதவு நேற்று காலை உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. தகவலறிந்த ஜெயந்தி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இந்த 2 கொள்ளை சம்பந்தமாக அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News