உள்ளூர் செய்திகள்
- ராமர் பஜனை பாடல்கள் பாடப்பட்டு உலக நலன், கல்வி செல்வம், ஆரோக்கியம் வேண்டி சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
- ராமர் சிலைக்கு பெண்கள் மலர்தூவி விளக்கேற்றி வணங்கினர்.
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த அப்புவிளை மாளவியா வித்யாகேந்திர பள்ளியில் இந்து முன்னணி சார்பில் வளர்பிறை ராமநவமி கூட்டு பிராத்தனை நடந்தது.
ஆசிரியர் மோகனா தலைமை தாங்கினார் அன்னையர் முன்னணி ராஜேஷ்வரி முன்னிலை வகித்தார். மகேஷ்வரி வரவேற்றார். நிகழ்ச்சியில் ராமர் பஜனை பாடல்கள் பாடப்பட்டு உலக நலன், கல்வி செல்வம், ஆரோக்கியம் வேண்டி சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ராமர் சிலைக்கு பெண்கள் மலர்தூவி விளக்கேற்றி வணங்கினர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை இந்து முன்னணி நகர தலைவர் ஜெயசீலன், செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.