உள்ளூர் செய்திகள்

ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்து ஆவணத்தை ரத்து செய்ய கோரி பெண் மனு

Published On 2023-02-07 08:24 GMT   |   Update On 2023-02-07 08:24 GMT
  • கணவர் ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்து ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • ராமநாதபுரம் கலெக்டரிடம் பட்டதாரி பெண் மனு கொடுத்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்த பட்டதாரி பெண் லுத்துபியா பேகம். இவர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

எனக்கும், கீழக்கரை முகம்மது அப்துல் காதர் மரைக்கா (வயது50) என்ப வருக்கும் 2002-ம் ஆண்டு திருமணமானது. எங்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். திருமணத்தின்போது எனது தந்தை வரதட்சணையாக கொடுத்த வீட்டில் 20 வருடங்களாக கணவர் மற்றும் பிள்ளைகள் வசித்து வருகிறோம். கடந்த சில வருடங்களாக எனது கணவரின் நடத்தை மற்றும் அணுகுமுறையில் பல மாற்றங்கள் காணப்பட்டது.

திருமணத்தின் போது எனது தந்தை 41 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து திருமணம் செய்து வைத்தார். அதனை எனது கணவர் விற்றும், அடகு வைத்தும் ஊதாரித்தனமாக செலவு செய்தார். மேலும் எனது குடும்பத்தார் கொடுத்த ரூ.10 லட்சத்தையும் அபகரித்து விட்டார்.

என்னை ஏமாற்றி எனக்கு சொந்தமான சொத்தை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். எங்களின் வாழ்வாதாரத்திற்காக அந்த சொத்து ஆவணத்தை ரத்து செய்து என்னிடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News