உள்ளூர் செய்திகள்

ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர்.

ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

Published On 2023-08-01 06:29 GMT   |   Update On 2023-08-01 06:29 GMT
  • ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  • அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரை

ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிர குடும் பத்தினர் வசித்து வரு கின்றனர். அந்தந்த பகுதிகளில் மின்கம்பங்கள் அமைத்து அதன் மூலம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் வாரிய அலுவலர்கள் முறை யாக மின்கம்பத்தை பராமரிக்காததால் தற்போது பல மின்கம்பங்கள் பழுதடைந்து உள்ளது.

குறிப்பாக கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் கம்பத்தின் தலை பகுதியில் உள்ள சிமெண்டுகள் பெயர்ந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

இந்த மின்கம்பம் அருகே குழந்தைகள் விளையாடி வரு கின்றனர். அதுமட்டுமல்லாது அந்த மின்கம்பத்தை கடந்து முதியோர், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்கின்ற னர். அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதால் அதிர்வுகள் ஏற்பட்டு அவ்வப்போது மின்தடையும் ஏற்படுகிறது. பல மாதங்க ளாகியும் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

மின்கம்பங்கள் எந்த நேரத்திலும் உடைந்து விழும், டிரான்ஸ்பார்மர்கள் எப்பொழுது வெடித்து சிதறும் நிலையில் உள்ளது. இதனை மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பங்கள், டிரான்ஸ்பாரங்களை மாற்றாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். பழுத டைந்த மின்கம்பங்களால் நகரில் பல பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது. அசம்பாவிதம் ஏற்படு வதற்குள் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News