உள்ளூர் செய்திகள்

தெற்கு தரவை ஊராட்சியில் இயற்கை வேளாண் பண்ணையை சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் பார்வையிட்டனர். அருகில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், எம்.எல்.ஏ. கருமாணிக்கம் மற்றும் பலர் உள்ளனர். 

ரூ.38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2022-12-10 12:22 IST   |   Update On 2022-12-10 12:22:00 IST
  • ராமநாதபுரத்தில் ரூ.38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பொதுக்கணக்குக்குழுவினர் வழங்கினர்.
  • ரூ.20 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழுவின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் (ஓசூர் தொகுதி), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), பொது கணக்குக்குழு செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் வட்டம் தனுஷ்கோடி பகுதியில் கடல் ஆமை குஞ்சு பொரிப்பகம், மண்டபம் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.20 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து பனைக்குளம் ஊராட்சி, பொன்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள், சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள சிட்கோ அலுவலகம், தெற்குதரவை ஊராட்சியில் முன்னோடி விவசாயி இயற்கை வேளாண் முறையில் செய்யப்படும் பயிர் சாகுபடி ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் லட்சம் மதிப்பீட்டிலான நிவாரணத்தொகைக்கான ஆணைகள், சி சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.53,407 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.39 ஆயிரம் மதிப்பிலான உதவிகள் என மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.38.04 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழுவின் தலைவர் செல்வபெருந்தகை வழங்கி னார்.

இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், மாவட்ட வருவாய் அலு வலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி, துணைச் செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் பாலசீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News