உள்ளூர் செய்திகள்

அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் 20 நிமிடங்களுக்கு சாலைகளில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

Published On 2023-10-14 14:53 IST   |   Update On 2023-10-14 14:53:00 IST
  • அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் 20 நிமிடங்களுக்கு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
  • மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டபம்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ெரயில் மார்க்கமாக ராமேசுவரத்திற்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக அயோத்தி, புவனேஸ்வர், ஓகா ஆகிய வட மாநிலங்களுக்கு வாராந்திர ெரயில்கள், திருப்பதிக்கு வாரம் 3 நாள், சென்னை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு தினசரி ெரயில்கள், கோவை வாராந்திர ெரயில், கன்னியாகுமரிக்கு வாரம் 3 நாள் ெரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் விழா காலங்களில் பல்வேறு நகரங்க ளில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இதனால் ராமேசு வரத்திற்கு மட்டும் நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.

ெரயில்கள் இயக்கத்தின் போது ராமேசுவரம்- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி, இருமேனி ஆகிய 2 இடங்களில் ெரயில்வே கேட் மூடப்படு கிறது. இதனால் ராமேசுவரத்தில் இருந்து பிற நகரங்களுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள், சுற்றுலா வாகனங்கள், பிற நகரங்களில் இருந்து ராமேசுவரம் செல்லும் வாகனங்கள் ெரயில்கள் கடந்து செல்லும் வரை காத்திருக்கும் நிலை இதுநாள் வரை தொடர்கிறது. மதுரை- ராமேசுவரம் ெரயிலுக்கு கேட் மூடப்படும்போது இந்த வழித்தடத்தில் ெரயில் கடந்து செல்ல குறைந்த பட்சம் 10 நிமிடங்களாகிறது. அதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இரு புறமும் அணி வகுத்து நிற்கின்றன. அதைத் தொடர்ந்து அரசு பஸ் டிரைவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. நீண்ட நேரம் காத்திருக்கும் அரசு பஸ்கள் பயண நேரத்தை ஈடுகட்ட எதிரெதிரே முண்டியடிப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

இரவு நேரத்தில் ராமேசுவரம்- சென்னை, மதுரை- ராமேசுவரம் ெரயில்கள் சந்திப்பிற்காக மூடப்படும் இந்த கேட் 20 நிமிடங்களுக்கு பின் திறக்கப்படுகிறது. அவசர சிகிச்சை ஆம்புலன்சுகள் சில நேரங்களில் சிக்குவதால் உயிருக்கு போராடுபவரின் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டு, தாமதமாகும் சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை உச்சிப்புளி அருகே ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பயணிகள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ராமநாதபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.என். நாகேஸ்வரன் கூறுகையில், தற்போது பாம்பன் பாலத்தில் புதிய ெரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அனைத்து ெரயில்களும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் பாசஞ்சர் ெரயில்கள் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதனால் தற்போது குறைந்த அளவு எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மட்டுமே இந்த வழித்தடத்தில் செல்கிறது. அதனால் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே ெரயில்வே கேட் அடைக்கப்படுகிறது. பாம்பனில் புதிய ெரயில்வே பாலம் அமைக்கப்பட்டு ெரயில் சேவைகள் தொடங்கிய பிறகு அனைத்து ெரயில்களும் ராமேசுவரம் வரை செல்லும். அப்போது காலை, மாலை நேரங்களிலும் அதிக நேரம் ெரயில்வே கேட் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமம் அடைய வாய்ப்பு உள்ளது. மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News