உள்ளூர் செய்திகள்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அஞ்சலி

Published On 2022-08-11 08:34 GMT   |   Update On 2022-08-11 08:34 GMT
  • கழக மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் 2001-ல் படுகொலை செய்யப்பட்டார்.
  • தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளராக இருந்த கணேச பாண்டியன், 2001-ல் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது 21-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்ட பட்டியல் அணி தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் மாவட்ட தலைவர் கதிரவன் முன்னிலையில் பா.ஜ.க.வினர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆத்மா கார்த்திக், தாய் லட்சுமி, பிரியா முருகானந்தம், இயற்கை மற்றும் கனிமவள மாவட்ட தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் காளி ராஜா, துணைத் தலைவர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர் உமா ரமணி, தரவு மேலாண் பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் கலைவாணி உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News