உள்ளூர் செய்திகள் (District)

தொண்டி சிந்தாத்திரை அன்னை ஆலய தேர்பவனி

Published On 2023-05-07 08:34 GMT   |   Update On 2023-05-07 08:34 GMT
  • தொண்டி சிந்தாத்திரை அன்னை ஆலய தேர்பவனி நடந்தது.
  • பங்கு இறைமக்கள் கலந்துகொண்டனர்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை எதிரே உள்ள புனித சிந்தாத்திரை அன்னை ஆலய திருவிழா பங்குத்தந்தை சவரிமுத்து தலைமையில் நடந்தது. சிவகங்கை வட்டார அதிபர் ஜேசுராஜ் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

மேத்தா, முத்துமாலை, மரிய அந்தோணி, ஸ்டீபன், ஜான்பால், ஜோசப் ராஜா, குழந்தை யேசு, அன்பரசு, ஜோசப் லூர்துராஜா ஆகியோர் நவ நாள் திருப்பலி நடத்தினர்.

விழா நிறைவில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் திருப்பலி நடத்தி குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனி நடந்தது. முகிழ்தகம், ஆர்.சி.நகர், வட்டாணம் தெற்கு தோப்பு, வெள்ளாளக் கோட்டை, வேலங்குடி, நரிக்குடி, கோடி வயல், சின்னத்தொண்டி காந்தி நகர், சவேரியார்பட்டினம், விளக்கனேந்தல், புடனவயல், புதுக்குடி, தண்டலக்குடி, தொண்டி, செங்காலன் வயல் ஆகிய பங்கு இறைமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News