உள்ளூர் செய்திகள்

தமிழக மக்கள் எழுச்சி கழகம் தி.மு.க.வுடன் இணையும் முப்பெரும் விழா

Published On 2023-07-19 07:36 GMT   |   Update On 2023-07-19 07:36 GMT
  • தமிழக மக்கள் எழுச்சி கழகம் தி.மு.க.வுடன் இணையும் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடந்தது.
  • மாநில செயலாளர் பஷீர் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் திராவிட முன்னேற்ற கழக கட்சியோடு தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் இணையும் விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

முப்பெரும் விழாவிற்கு தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேச உள்ளார். இன்று மாலை 4 மணி அளவில் திருப்புல் லாணி வி.ஏ.ஓ. அலுவலகம் முன்பு நடைபெறும் மாபெரும் முப்பெரும் விழாவிற்கு தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வைக்க உள்ள னர்.

முன்னதாக தமிழக மக்கள் எழுச்சி கழக மாநில செயலாளர் பஷீர் அலி வரவேற்புரை நிகழ்த்து கிறார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரைப்பட நடிகர் ராஜேந்திரன் தி.மு.க.வில் இணைவது குறித்தும் ஏற்புடைய திட்டங்கள் குறித்தும் விளக்க உரை ஆற்றுகிறார்.

Tags:    

Similar News