உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் வழங்கல்

Published On 2022-07-16 09:02 GMT   |   Update On 2022-07-16 09:02 GMT
  • ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
  • அறக்கட்டளையின் தலைவர் பாலா, செயலாளர் குணா ஜோதிலிங்கம் ஆகியோர்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தலைமை ஸ்டெல்லா மேரி நன்றி கூறினார்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. கிழக்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தொண்டி அருகே உள்ள திருவெற்றியூரில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக புனித நார்ப்பட் மேல்நிலைப்பள்ளியில் 650 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். வேல்டு விசன் இந்தியா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சந்திரன், எபினேசர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையின் தலைவர் பாலா, செயலாளர் குணா ஜோதிலிங்கம் ஆகியோர்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தலைமை ஸ்டெல்லா மேரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News