உள்ளூர் செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. செயற்குழு கூட்டம்

Published On 2023-10-05 08:52 GMT   |   Update On 2023-10-05 08:52 GMT
  • ராமநாதபுரம் சட்டமன்ற மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. செயற்குழு கூட்டம் நடந்தது.
  • மாவட்ட தலைவர் ரியாஸ்கான் விளக்கி பேசினார்.

கீழக்கரை

ராமநாதபுரம் சட்டமன்ற மேற்கு தொகுதி சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக மாவட்ட அலுவலகத்தில் தொகுதியின் துணைத் தலைவர் முஹம்மது மீராசா தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.தொகுதியின் செயலாளர் அக்பர் அலி வரவேற்றார்.வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் நடைபெற இருக்கும் வெல்லட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டின் அவசியத்தை கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் விளக்கி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத் தலைவர் சோமு, தொகுதியின் துணைத் தலைவர் மூர்த்தி, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் பாரூக் ராஜா முஹம்மது, ஜான் முஹம்மது மற்றும் ராமநாதபுரம், கீழக்கரை, பெரியபட்டினம், திருப்புல்லாணி நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியாக தொகுதியின் பொருளாளர் கீழை அஸ்ரப் நன்றி கூறினார்.

Tags:    

Similar News