உள்ளூர் செய்திகள்

9 மையங்களில் கிராம உதவியாளர்கள் தேர்வு

Published On 2022-12-04 11:44 IST   |   Update On 2022-12-04 11:44:00 IST
  • 9 மையங்களில் கிராம உதவியாளர்கள் தேர்வு நடந்தது.
  • கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 3 ஆண்டுகளுக்குட்பட்ட காலியாக உள்ள 50 கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு 7.11.2022 வரை இணையவழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது அந்த பதவிக்கான எழுத்து திறனறித்தேர்வு இன்று நடந்தது.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லுாரி, ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவாடானை புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி, ராஜசிங்கமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி, கே.ஜே. கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

மையங்களுக்குள் தேர்வர்கள் பலத்த சோத னைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.ராமநாதபுரம் கேணிக்கரை செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.

Tags:    

Similar News